ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

நடிகர் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் கடந்த வருடமே அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் 55 நாட்கள் கொண்ட மிக நீண்ட படப்பிடிப்பிற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.
ஆனால் வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு நாடெங்கிலும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு ஊர்களில் கலை விழாக்கள் நடைபெற இருக்கின்றன. அதனால் இதற்கான பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட சிலவற்றை காரணம் காட்டி காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை நடத்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர், இதனை தொடர்ந்து வேறு வழியின்றி படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பி உள்ளனர்.