தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்து சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் படித்த ஸ்ருதி ரெட்டி, மாடல் அழகியாக வாழ்க்கையை துவக்கினார். பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா புரட்சி' என்ற படத்தில் பத்திரிகையாளராக நடித்தார். தற்போது அவர் 'விசாரணை கைதி' என்ற படத்தில் வழக்கறிஞராகவும், நட்டி நட்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் சிக்கி கைதான விசாரணை கைதிக்கு ஆதரவாக வாதாடி அவரை காப்பாற்றும் வழக்கறிஞராக நடித்து வருகிறார்.
“சினிமா நடிகை ஆகும் கனவுடன்தான் சென்னையில் படித்தேன். சிறிய தேடலுக்கு பிறகு ‛மெரினா புரட்சி' வாய்ப்பு கிடைத்து. இந்த படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானேன். என்றாலும் எனது நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை விசாரணை கைதி தந்துள்ளது. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும். தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர்களின் நடிகையாக நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே தனது கனவு” என்கிறார் ஸ்ருதி ரெட்டி.