பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடந்த வாரம் அவரது நண்பரான பர்ஹான் பின் லியாகத் என்பவருக்கு அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, இன்ஸ்டாகிராம் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதன்பிறகு அவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலன் என இணையதளங்களிலும், யு டியுப் தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன. அது குறித்து எதுவும் சொல்லாமல் இருந்த கீர்த்தி சுரேஷ் ஒரு ஆங்கில இணையதளத்தின் செய்தியைப் பகிர்ந்து அதற்கு பதிலளித்துள்ளார்.
“ஹஹஹஹா இந்த நேரத்தில் எனது அன்பான நண்பரை இழுக்க வேண்டியதில்லை. உண்மையான மர்ம மனிதரை நான் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுத்துவேன். அதுவரை “சில் பில்” ஆக இருங்கள். குறிப்பு - ஒரு முறை கூட சரியாக வரவில்லையா,” என கிண்டலடித்து பதிலளித்துள்ளார்.
ஆங்கில இணையதளம் 'மர்ம மனிதர்' என்ற அர்த்தத்தில் 'மிஸ்டரி மேன்' என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தது. அதற்குத்தான் கீர்த்தி சுரேஷ் மேலே சொன்னபடி தன்னுடைய பதிலைப் பதிவு செய்துள்ளார்.