மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
கேன்ஸ் திரைப்பட விழா மும்முரமாக நடந்து வருகிறது. அதில் இந்திய நடிகைகள் விதவிதமான ஆடைகள், அணிகலன்கள் அணிந்து கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பிங்க் கலர் கவுண் அணிந்து காட்சி அளித்ததுடன் அவர் அணிந்திருந்த முதலை வடிவ நெக்லஸ் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் நகை நிபுணரான அருந்ததி ஷேத் என்பவர் ஊர்வசி ரவுத்தேலா அணிந்திருந்த நெக்லஸ் போலி என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் “இந்த லுக்கை பார்த்து நான் குழம்பியிருக்கிறேன். அவர் கார்டியரின் ஒரிஜினல் மரியா பெலிக்ஸ் முதலை நெக்லஸா அணிந்திருக்கிறார்? பிரான்ஸில் இருக்கும் கேன்ஸுக்கு சென்றிருக்கிறீர்கள். அதுதான் கார்டியரின் சொந்த நாடு. வரலாற்று சிறப்புமிக்க நகையின் போலியை அணிவது. வெட்கமாக இருக்கிறது. நம் நாட்டில் ஸ்பெஷலான பொக்கிஷங்கள், நகைகள் இருக்கிறது. அதை அவர் அணிந்திருக்கலாம். என்றார்.
இதுகுறித்து ஊர்வசி ரவுத்தேலா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஊர்வசி ரவுத்தேலா அணிந்திருந்த ஒரிஜினல் முதலை நெக்லஸின் விலை 200 கோடியில் இருந்து 276 கோடியாக உயர்ந்துவிட்டது. அவர் நிஜமான நகையே அணிந்திருந்தார். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.