இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தெலுங்குத் திரையுலகத்தின் 'என்றும் மார்க்கண்டேயன்' என்றழைக்கப்படுபவர் நாகார்ஜுனா. எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். இருந்தாலும் அவரால் தற்போது பெரிய வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை. அவரது காலத்து ஹீரோக்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா கூட இப்போதும் 100 கோடி படங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
நாகார்ஜுனா நடித்து கடைசியாக கடந்த வருடம் வெளிவந்த 'த கோஸ்ட்' படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதற்கடுத்து அவரது இளைய மகன் அகில் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த 'ஏஜன்ட்' படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கடுத்து அவரது மூத்த மகன் நாக சைதன்யா நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'கஸ்டடி' படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்து அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது.
கதைத் தேர்வுகளில் அவர்கள் சரிவர கவனம் செலுத்தவில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். கடும் போட்டி நிலவி வரும் இந்தக் காலத்தில் கதையும், கதாபாத்திரங்களும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களது கடைசி படங்களின் தோல்வி அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். எனவே, தங்களது அடுத்த படக் கதைத் தேர்வுகளில் அவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்பது உறுதி. சினிமாவில் வெற்றியும், தோல்வியும் யாருக்கு வேண்டுமானால் வரலாம். ஆனால், தோல்வியிலிருந்து மீள்வதுதான் முக்கியம்.