கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

நடிகர் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விரைவில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் .இந்த படத்தில் அவர் கபடி வீரராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் துருவ். அதன்படி, டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மாரி செல்வராஜ் படத்தை முடித்தவுடன் துருவ் விக்ரம் இந்த படத்தில் நடிப்பார் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.