படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் அதிகம் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் மட்டும் முக்கியமான படங்களில், குறிப்பாக தனது குருநாதர் மணிரத்னம் இயக்குகின்ற படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கால்ஷீட் கொடுத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த பாராட்டுக்களை பெற்றார் ஐஸ்வர்யா ராய்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என்றும் மலையாள நடிகர் திலீப் நடிக்க உள்ள அவரது 148 வது படத்தில் தான் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல போட்டோகிராபர் ஷாலு என்பவர் தெரியப்படுத்தி உள்ளதுடன், திலீப் 148 வது படத்திற்கான கிளாப் போர்டை வைத்து ஒரு பெண்மணி தனது முகத்தை மறைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு, சிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.