இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத் திரையுலகத்தில் 100 கோடி வசூலைப் பார்ப்பதே பெரிய ஒரு விஷயம். முதன் முதலில் 100 கோடி வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை ஏழு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம்தான் படைத்தது. அதற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களில் ஆறு படங்கள் மட்டுமே அந்த சாதனையைப் படைத்துள்ளன.
இதுவரையிலும் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தைப் பிடித்த படமாக 'புலி முருகன்' படம் மட்டுமே இருந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 134 கோடி. அந்த வசூல் சாதனையை மூன்று வாரங்களுக்குள்ளாகவே முறியடித்துள்ளது '2018' திரைப்படம். ஜுட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், லால், நரேன், அபர்ணா பாலமுரளி, தன்வி ராம் மற்றும் பலர் நடித்த அப்படம் மே 5ம் தேதி மலையாளத்தில் வெளியானது. கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
தற்போது 150 கோடி வசூலைக் கடந்து மலையாளத் திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்து நம்பர் 1 இடத்தைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.