வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'.
சுமார் 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்த இந்தப் படம் கடந்த வாரம் அமேசான் ஓடிடி தளத்தில் தனி கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளியானது. இப்போது அமேசான் சந்தாதார்கள் தனி கட்டணம் செலுத்தாமல் பார்க்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் வெளியாகியுள்ளது. ஹிந்தி மொழியில் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை.
கல்கி எழுதிய நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கியிருந்தார். முதல் பாகம் 2022ம் வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன்பின் ஒரு மாதம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியானது. இப்போது படத்தின் இரண்டு பாகங்களும் ஓடிடி தளத்தில் உள்ளதால் ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் இரண்டு பாகங்களையும் பார்த்து ரசிக்கலாம்.




