ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி தமிழில் ஆக்ஷன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கார்கி, கேப்டன் படங்களில் நடித்தவருக்கு கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் 1, 2 படங்கள் புகழ் வெளிச்சம் தந்தது. தற்போது மூன்று மொழிகளில் அவர் நடித்து வருகிறார். ஐஸ்வர்ய லட்சுமி ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛நான் ஒரு டாக்டர். எம்பிபிஎஸ் படித்துள்ளேன். ஆனால் சினிமாவில் உள்ளேன். இது கடவுளின் விருப்பம் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் சினிமாவிற்கு வருவேன், நடிகையாவேன் என ஒரு போதும் நினைத்துகூட பார்க்கவில்லை. படித்து முடித்ததும் ஒரு வேலைக்கு செல்வதே சமூக அந்தஸ்து, சினிமா அப்படிப்பட்டது அல்ல என எனது குடும்பத்தினர் எண்ணினர். காரணம் சினிமா பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயம் அவர்களுக்கு அப்படி எண்ண தோன்றியது. இருப்பினும் அதையெல்லாம் கடந்து சினிமாவிற்கு வந்தேன். சினிமாவில் நிறைய எதிர்ப்புகளை சந்தித்தேன். சினிமாவிற்கு வருவது எளிதானது அல்ல. ஒவ்வொரு நாளும் போராட்டமே'' என்றார்.