ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென்று லைகா நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டதால் திட்டமிட்டபடி விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற வாய்ப்பு இல்லை தாமதமாகும் என்கிற தகவல்களும் வெளியாகின. ஆனபோதும் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி இந்த வாரத்தில் தொடங்குகிறது.
இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகளுக்காக அஜித்தும், மகிழ்திருமேனியும் லண்டனுக்கு சென்று தற்போது சென்னை திரும்பி விட்டார்கள். அங்கு அஜித்தின் புதிய கெட்டப்புக்கான போட்டோ சூட் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்க உள்ளது . இதற்காக அங்கு ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. அதோடு முதல் கட்ட படப்பிடிப்பில் வில்லன்களுடன் அஜித் மோதும் அதிரடியான சண்டை காட்சி படமாக உள்ளது.
அஜித்தின் கடந்த சில படங்களில் ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இடம்பெறாமல் ஆக்சனுக்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் ஆக்சனுக்கு இணையாக ரொமான்டிக் காட்சிகளும் இடம் பெறுகிறதாம். தற்போது தொடங்கப்படும் படப்பிடிப்பை இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார் மகிழ்திருமேனி.