ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ராதாமோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி மற்றும் பலர் நடித்துள்ள 'பொம்மை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 'மான்ஸ்டர்' படத்திற்குப் பிறகு மீண்டும் பிரியா பவானியுடன் ஜோடி சேர்ந்து நடித்த காரணம் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரியா பவானியை சிம்ரனுடன் ஒப்பிட்டுப் பேசினார் எஸ்ஜே சூர்யா.
“எங்க அக்கா பொண்ணுக்கு கிட்டத்தட்ட பிரியா பவானி சங்கரோட சாயல் இருக்கும். சிம்ரன் மேடம் பார்த்தீங்கன்னா, அந்த பேஸ் கட் இருக்கும், த்ரிஷாவுக்கு இருக்கும். முகத்துல ஒரு கட் இருக்கும், அந்த கட் இருந்ததுன்னா ஒரு முகத்துக்கும் இன்னொரு முகத்துக்கும் பொருத்தமா இருக்கும். ஷாரூக்கானுக்கும் கஜோலுக்கும் அப்படி இருக்கும். அதுக்கு என்ன காரணம்னு சொல்ல முடியாது. எனக்கும் பிரியாவுக்கும் ஒரு மேத்தமேடிக்கல் பியூச்சர்ஸ் செட் ஆகுது. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.
“தொட்டால் பூ மலரும்” பாட்டுல நானும் சிம்ரனும் இருந்த ஸ்டில்லையும், 'பொம்மை' படத்துல நானும், பிரியாவும் இருந்த ஸ்டில்லையும் இதுக்கு முன்னாடி ஒண்ணா போட்டிருந்தேன். சிம்ரன் மாதிரியே பிரியா இருந்தாங்க. 'மான்ஸ்டர்' படத்தோட வெற்றி, நல்லாவும் நடிச்சாங்க. அதான் இந்தப் படத்துல மீண்டும் ஜோடியா நடிச்சிருக்காங்க,” என்றார் எஸ்ஜே சூர்யா.
சிம்ரன் போல பிரியா பவானி இருக்கிறார் என்ற எஸ்ஜே சூர்யாவின் பேச்சுக்கு நிறையவே வெட்கப்பட்டு பக்கத்தில் இருந்த இயக்குனர் ராதாமோகனிடம் என்னவோ கிசுகிசுத்தார் பிரியா.