இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு நடிகர் கோபிசந்த் தொடர்ந்து அதிரடியான குடும்ப படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. கடைசியாக ராமபாணம் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் கோபிசந்த் தனது 31வது படம் குறித்து அறிவித்துள்ளார். பிரபல கன்னட இயக்குனர் ஷர்சா இயக்கத்தில் கோபிசந்த் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு பீமா என்று தலைப்பு வைத்துள்ளனர். இதனை பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஜி.எப் பட இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார். இதுவும் கோபிசந்த்தின் வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகிறது. போலீஸ் வேடத்தில் அவர் நடிக்கிறார்.