ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித் நடித்த வாலி படத்தில் இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு விஜய் நடித்த குஷி படத்தை இயக்கியவர் பின்னர் அன்பே ஆருயிரே படத்தில் அவரே ஹீரோவும் ஆகிவிட்டார். சமீபகாலமாக ஹீரோ, வில்லன் என வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. மாநாடு படத்தின் ஹிட்டுக்கு பிறகு ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர், விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அதோடு இந்தியன் 2 படத்திலும் அவர் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் தான் நடித்துள்ள பொம்மை படம் நாளை 16-ம் தேதி திரைக்கும் நிலையில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் எஸ். ஜே. சூர்யா. அப்போது அவர் கூறுகையில், ஏற்கனவே சிம்பு நடிப்பில் ஏசி என்ற ஒரு படத்தை நான் இயக்குவதாக இருந்தது. அந்த படம் அப்போது கைவிடப்பட்டது . அதில் சிம்பு கேங்ஸ்டராகவும், பசு வளர்ப்பவராகவும் இரண்டு வேடங்களில் நடிக்க இருந்தார். அது ஒரு ஜாலியான படம். அந்த கதை குறித்து மாநாடு படத்தில் நடித்தபோது மீண்டும் சிம்புவுடன் விவாதித்தேன். அதனால் சரியான சந்தர்ப்பம் அமையும் போது அப்படத்தை சிம்புவை வைத்து இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.