சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அஜித் நடித்த வாலி படத்தில் இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு விஜய் நடித்த குஷி படத்தை இயக்கியவர் பின்னர் அன்பே ஆருயிரே படத்தில் அவரே ஹீரோவும் ஆகிவிட்டார். சமீபகாலமாக ஹீரோ, வில்லன் என வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. மாநாடு படத்தின் ஹிட்டுக்கு பிறகு ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர், விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அதோடு இந்தியன் 2 படத்திலும் அவர் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் தான் நடித்துள்ள பொம்மை படம் நாளை 16-ம் தேதி திரைக்கும் நிலையில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் எஸ். ஜே. சூர்யா. அப்போது அவர் கூறுகையில், ஏற்கனவே சிம்பு நடிப்பில் ஏசி என்ற ஒரு படத்தை நான் இயக்குவதாக இருந்தது. அந்த படம் அப்போது கைவிடப்பட்டது . அதில் சிம்பு கேங்ஸ்டராகவும், பசு வளர்ப்பவராகவும் இரண்டு வேடங்களில் நடிக்க இருந்தார். அது ஒரு ஜாலியான படம். அந்த கதை குறித்து மாநாடு படத்தில் நடித்தபோது மீண்டும் சிம்புவுடன் விவாதித்தேன். அதனால் சரியான சந்தர்ப்பம் அமையும் போது அப்படத்தை சிம்புவை வைத்து இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.