த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் |
தமிழ் சினிமாவில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பாலாம்பிகா. இவர் பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த ராமசாமி என்பரின் மகள். இவர் ‛பாலம்' என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார். இப்படத்தில் கண் பார்வை தெரியாத தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு ‛நடிகன்' படத்தில் குஷ்புவுக்கு தங்கையாக நடித்தார். ‛பாட்டுக்கு ஒரு தலைவன்' என்ற படத்தில் விஜயகாந்த் தங்கையாகவும், ‛திருமதி பழனிச்சாமி' என்ற படத்தில் சத்யராஜுக்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.
பின்னர் சின்னத்திரை பக்கம் திரும்பிய பாலாம்பிகா, பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அதிர்ச்சி தரக்கூடிய தகவலை அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‛‛அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொன்னார்கள். அதில் உடன்பாடு இல்லை. அதுவும் இல்லாமல் என் அப்பாவுக்கும் இதில் உடன்பாடில்லை. இப்படி சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பு நமக்கு தேவையில்லை என அப்பா சொல்லிவிட்டார். விஜய் உடன் நான் நடித்திருந்தால் தற்போது என் வாழ்க்கை மாறியிருக்கும்.
எனது திருமண வாழ்க்கையும் ஒழுங்காக அமையவில்லை. கணவர் சரியில்லை. அதனால் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டேன். நான் பல நாடுகளுக்கு சுற்றியிருக்கிறேன். நன்றாக சம்பாதித்தபோது கொஞ்சம் அதிகமாகவே ஆடிவிட்டேன். அதனால் அனைத்தையும் இழந்துவிட்டேன். கொரோனா சமயத்தில் கஷ்டப்பட்டபோது நடிகர் சத்யராஜை தொடர்புகொண்டு உதவி கேட்டேன். அவர் என்னை வீட்டுக்கு அழைத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார். விஜயகாந்தை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. இவ்வாறு கூறினார்.
பாலாம்பிகாவின் இந்த பேட்டி, தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.