பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாளத்தில் வெளிவந்த 'மணிசித்ரதாழ்' படம், இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 'சந்திரமுகி'யாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. வசூலையும் குவித்தது. தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையையும் படைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்பிய பி.வாசு அதில் மீண்டும் ரஜினியை நடிக்க வைக்க முயற்சித்தார், அவர் மறுத்து விட்டார். ஜோதிகாவும் நடிக்க மறுத்து விட்டார்.
இதனையடுத்து ரஜினி நடிக்க வேண்டிய கேரக்டரில் ராகவா லாரன்சும், ஜோதிகா நடிக்க வேண்டிய கேரக்டரில் கங்கனா ரணாவத்தும் நடிக்க, தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த வடிவேலு நடித்திருக்கிறார். ராதிகா புதிதாக இணைந்துள்ளார்.
தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள லைகா நிறுவனம், “சந்திரமுகி 2' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.