ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தயாரிப்பாளர்களிடம் நடிப்பதற்காக முன்பணம் வாங்கிவிட்டு நடிக்க வராமல் சிக்கலை ஏற்படுத்திய சில நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்பதும் அந்தத் தீர்மானத்தில் ஒன்று. யார் யார் அந்த நடிகர்கள் என தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் வெளியிடப்படவில்லை.
இருந்தாலும் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, அதர்வா, யோகிபாபு, ஆகியோர்தான் அவர்கள் என அதிகாரப்பூர்வமில்லாத ஒரு தகவல் பரவியது. ஆனால், அந்தப் பட்டியலில் சிம்பு, விஷால் ஆகியோரது பெயரை வேண்டுமென்றே சிலர் பரப்பியுள்ளதாகச் சொல்கிறார்கள். சிம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்த்த பிறகுதான் அவர் நடித்த 'வெந்து தணிந்தது காடு, பத்து தல' ஆகிய படங்கள் வெளிவந்தன என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
பரபரப்புக்காகவும், தங்களைப் பற்றிய தவறான தகவல் வேண்டுமென்றே பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் யு டியுப் சேனல்களில் சிலர் இப்படி செய்கிறார்கள் என சம்பந்தப்பட்ட நடிகர்கள் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளார்களாம். தயாரிப்பாளர் சங்கத்தைப் பொறுத்தவரையில் அந்த நடிகர்கள் யார், யார் என்று வெளியிடாமல் இந்த விவகாரத்தை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது.