'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தயாரிப்பாளர்களிடம் நடிப்பதற்காக முன்பணம் வாங்கிவிட்டு நடிக்க வராமல் சிக்கலை ஏற்படுத்திய சில நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்பதும் அந்தத் தீர்மானத்தில் ஒன்று. யார் யார் அந்த நடிகர்கள் என தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் வெளியிடப்படவில்லை.
இருந்தாலும் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, அதர்வா, யோகிபாபு, ஆகியோர்தான் அவர்கள் என அதிகாரப்பூர்வமில்லாத ஒரு தகவல் பரவியது. ஆனால், அந்தப் பட்டியலில் சிம்பு, விஷால் ஆகியோரது பெயரை வேண்டுமென்றே சிலர் பரப்பியுள்ளதாகச் சொல்கிறார்கள். சிம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்த்த பிறகுதான் அவர் நடித்த 'வெந்து தணிந்தது காடு, பத்து தல' ஆகிய படங்கள் வெளிவந்தன என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
பரபரப்புக்காகவும், தங்களைப் பற்றிய தவறான தகவல் வேண்டுமென்றே பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் யு டியுப் சேனல்களில் சிலர் இப்படி செய்கிறார்கள் என சம்பந்தப்பட்ட நடிகர்கள் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளார்களாம். தயாரிப்பாளர் சங்கத்தைப் பொறுத்தவரையில் அந்த நடிகர்கள் யார், யார் என்று வெளியிடாமல் இந்த விவகாரத்தை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது.