டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்குத் திரையுலகத்தில் போதைப் பொருள் விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது. தெலுங்கில் 'கபாலி' படத்தை வெளியிட்ட கேபி சவுத்ரி என்ற தயாரிப்பாளர் பத்து நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுக்கு அவர் போதைப் பொருட்களை சப்ளை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தெலுங்கில் குணச்சித்திர நடிகையாக இருக்கும் சுரேகா வாணி அவரது மகள் மற்றும் சில நடிகைகள், கேபி சௌத்ரியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. தெலுங்கில் பல படங்களில் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி. தமிழில் 'விஸ்வாசம், மெர்சல், ஜில்லா, உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கேபி சௌத்ரி சர்ச்சையில் தனது பெயர் சிக்கியிருப்பது குறித்து சுரேகா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “சமீபத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகளால் எனது தொழில் எனது எதிர்காலம், எனது குடும்பம், எனது குழந்தைகளின் எதிர்காலம், உடல் நலம் அனைத்தும் பாதிக்கப்படும். தயவு செய்து எங்களைப் புரிந்து கொள்ளுங்கள், இந்த சர்ச்சையில் எங்களை இழுக்க வேண்டாம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.