தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது சில நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தரப் போவதில்லை என தீர்மானம் நடைபெற்றது. அந்த நடிகர்கள் யார், யார் என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் சில நடிகர்களின் பெயர்கள் வெளியாகி, இவர் இல்லை, அவர் இல்லை என்ற சந்தேகத்தில் முடிந்தன.
இதனிடையே, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தங்களது படங்களில் நடிக்க ஒப்புக் கொண்ட, வாய் மொழியாகவோ, ஒப்பந்தம் மூலமாகவோ, நடிகர், நடிகைகளுடன் உள்ள பிரச்சினைகளை ஜுன் 28ம் தேதிக்குள் கடிதம் மூலம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள். அதன்பின் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இடையில் விரைவில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற உள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் ஜுலை 11ம் தேதி அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. அது தொடர்பாக உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் புதிய படங்கள் வெளியான பின் ஓடிடியில் படங்களை வெளியிடுவதற்கான கால அவகாசம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களுடன் தியேட்டர்காரர்களுக்கான வியாபாரப் பங்கீடு குறித்த விஷயங்களும் விவாதிக்கப்படலாம்.
தமிழ் சினிமாவில் வரும் வாரங்களில் அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் வெளிவர உள்ளன. அதனால், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம் ஆகியவை நடத்த உள்ள சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சங்கங்களைத் தொடர்ந்து வினியோகஸ்தர்கள் சங்கமும் கூட்டத்தை நடத்த வாய்ப்புள்ளது.