மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள மாமன்னன் படம் தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நான் சிறு வயதில் இருந்தே விஜய்யின் தீவிரமான ரசிகராக இருந்தேன். பள்ளியில் படித்த காலங்களில் அவருக்கு ரசிகர் மன்றம் கூட வைத்தேன். அதனால் இயக்குனர் ஆனதில் இருந்தே விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வருகிறது. அதன் காரணமாக விஜய்யை ஒருமுறை சந்தித்தபோது அவரிடத்தில் ஒரு கதை சொன்னேன். அதைக் கேட்டு அவர் ஷாக் ஆகிவிட்டார். என்றாலும் விரைவில் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று அவருக்காக கதை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த படம் சமூகம் சார்ந்த சமூகத்திற்கு தேவையான ஒரு கதையில் உருவாகும் என்கிறார் மாரி செல்வராஜ்.