இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் மலர் கதாபாத்திரத்தில் சந்தியாவும், பாண்டி கதாபாத்திரத்தில் ப்ரிட்டோ மனோவும் ஜோடியாக நடித்து வந்தனர். நிஜ வாழ்விலும் ஜோடியாக கமிட்டாகிவிட்ட இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரிலிருந்து அடுத்தடுத்து சந்தியாவும், ப்ரிட்டோ மனோவும் வெளியேறிவுள்ளனர்.
இதில் ப்ரிட்டோ மனோவுக்கு பதிலாக நடிகர் சுதர்சனம் கமிட்டான நிலையில், மலர் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி நேயர்களிடம் நிலவி வந்தது. தற்போது, மலர் கதாபாத்திரத்தில் சந்தியாவுக்கு பதிலாக நடிகை சிவன்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவன்யா, 'செவ்வந்தி' தொடரில் வில்லியாக கலக்கி வருகிறார். எனவே, அவரது எண்ட்ரி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.