தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. ரஜினிகாந்த் இப்போதும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு அவரை விட பல வயது குறைந்த நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் உயரத்தைத் தொட மற்ற நடிகர்கள் முயன்று வருகிறார்கள்.
அவர்களில் விஜய், அஜித் ஆகிய இருவருக்குத்தான் போட்டி அதிகமாக இருந்தது. அஜித் தனக்கென எந்த பட்டங்களையும் தற்போது வைத்துக் கொள்ளாத நிலையில் அவர் அந்த அடுத்த 'சூப்பர் ஸ்டார்' போட்டியில் அதிகம் பேசப்படாமல் இருந்தார். ஆனால், விஜய் நடித்து இந்த வருடம் வந்த 'வாரிசு' பட வெளியீட்டின் போதும் இந்த 'சூப்பர் ஸ்டார்' சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய படத்தில் நடித்துள்ள சீனியர் நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் சிவகார்த்திகேயனை ரஜினிகாந்த்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளனர். ஆனால், தன்னை அவருடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என சிவகார்த்திகேயன் பதிலளித்துப் பேசியுள்ளார். 'மாவீரன்' என ரஜினிகாந்த் படத்தின் பெயரை தனது படத்திற்குப் பயன்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.
இருந்தாலும் நேற்றைய விழாவை நடத்திய விதமும், சிவகார்த்திகேயன் மேடையில் ஏறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விதத்தையும் பார்த்த ரசிகர்கள் அவர் விஜய்யைப் போல செய்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் நடித்து படங்களின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எப்படி நடந்து கொண்டாரோ அதையே சிவகார்த்திகேயனும் பாலோ செய்கிறார் என்கிறார்கள்.
விஜய் அரசியலை நோக்கி தன்னுடைய பாதையைத் திருப்பியுள்ள இந்த நேரத்தில் ரஜினிகாந்த்தின் பாதையில் பயணிக்க சிவகார்த்திகேயன் ஆசைப்படுகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.