பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், “கடந்த 16 அக்டோபர் 2017 அன்று தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதிம் நிர்ணயித்து ஆணையிட்டது. 6 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் நடை முறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே திரையரங்க உரிமையாளர்களை காப்பாற்ற கீழ்க்கண்டவாறு கட்டணங்களை உயர்த்தி வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்,” என தெரிவித்துள்ளனர். அவர்கள் கோரிக்கை வைத்துள்ள கட்டணங்கள் விவரம்…
* மல்டிபிளக்ஸ் -- ஏசி தியேட்டர் ரூ.250, நான் ஏசி ரூ.150
* மாநகரம், நகரம், டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து - ஏசி தியேட்டர் ரூ.200, நான் ஏசி ரூ.120
* ஐமாக்ஸ் - ரூ.450
* எபிக் - ரூ. 400
* சாய்வு இருக்கை தியேட்டர்கள் - ரூ.350