பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் முக்கியமான தடத்தைப் பதித்த 'சுப்பிரமணியபுரம்' படம் வெளிவந்து இன்றுடன்(ஜூலை 4) 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. சசிகுமார் இயக்கம் நடிப்பில், அவருடன் சுவாதி, ஜெய், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து 2008ம் ஆண்டு ஜுலை 4ம் தேதி வெளிவந்த படம். 80களில் நடப்பதாகக் கதை கொண்ட இந்தப் படம் அந்த நாட்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. படத்தில் நடித்த அனைவருமே பாராட்டுக்களைப் பெற்றனர். நட்பின் நம்பிக்கைத் துரோகத்தை ரத்தமும், சதையுமாய் காட்டிய படம்.
இன்று படத்தின் 15வது வருட நிறைவை முன்னிட்டு சசிகுமார், சமுத்திரக்கனி, ஜெய் உள்ளிட்ட பலரும் அவர்களது நினைவுகளையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துள்ளனர்.
“நேற்று போல் இருக்கிறது, 'சுப்பிரமணியபுரம்' 15 ஆண்டுகள்… நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளது. இப்படத்தை நீங்கள் அங்கீகரிக்க மட்டும் செய்யவில்லை, கொண்டாடினீர்கள். இந்த குறிப்பிடத்தக்க நாளில், உங்களிடம் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனது இயக்கத்தில் அடுத்த படத்தை ஆரம்பிக்கிறேன்,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2008ல் வெளிவந்த 'சுப்பிரமணியபுரம்' படத்திற்குப் பிறகு 2010ல் 'ஈசன்' என்ற படத்தை இயக்கினார் சசிகுமார். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு கடந்த 13 வருடங்களாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இயக்கம் பற்றி தெரிவித்துள்ளார்.