திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் சினிமாவில் முக்கியமான தடத்தைப் பதித்த 'சுப்பிரமணியபுரம்' படம் வெளிவந்து இன்றுடன்(ஜூலை 4) 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. சசிகுமார் இயக்கம் நடிப்பில், அவருடன் சுவாதி, ஜெய், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து 2008ம் ஆண்டு ஜுலை 4ம் தேதி வெளிவந்த படம். 80களில் நடப்பதாகக் கதை கொண்ட இந்தப் படம் அந்த நாட்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. படத்தில் நடித்த அனைவருமே பாராட்டுக்களைப் பெற்றனர். நட்பின் நம்பிக்கைத் துரோகத்தை ரத்தமும், சதையுமாய் காட்டிய படம்.
இன்று படத்தின் 15வது வருட நிறைவை முன்னிட்டு சசிகுமார், சமுத்திரக்கனி, ஜெய் உள்ளிட்ட பலரும் அவர்களது நினைவுகளையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துள்ளனர்.
“நேற்று போல் இருக்கிறது, 'சுப்பிரமணியபுரம்' 15 ஆண்டுகள்… நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளது. இப்படத்தை நீங்கள் அங்கீகரிக்க மட்டும் செய்யவில்லை, கொண்டாடினீர்கள். இந்த குறிப்பிடத்தக்க நாளில், உங்களிடம் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனது இயக்கத்தில் அடுத்த படத்தை ஆரம்பிக்கிறேன்,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2008ல் வெளிவந்த 'சுப்பிரமணியபுரம்' படத்திற்குப் பிறகு 2010ல் 'ஈசன்' என்ற படத்தை இயக்கினார் சசிகுமார். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு கடந்த 13 வருடங்களாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இயக்கம் பற்றி தெரிவித்துள்ளார்.