அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி சமீபகாலமாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
'நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான 'வினோதய சித்தம்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக திரும்புகிறார் சமுத்திரக்கனி. அதன்படி, சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார் சமுத்திரக்கனி. இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இது எல்லாம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சமுத்திரக்கனி தெலுங்கில் பவன் கல்யாண், நானி போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.