இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் தனுஷ் கடந்த வாரத்தில் கேப்டன் மில்லர் படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதைதொடர்ந்து நேற்று திருப்பதியில் மொட்டை அடித்து தரிசனம் செய்தார்.
இதையடுத்து தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி, நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா,சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெய்ராம், துஸ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்கிறார்கள். ஆனால், இது குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே சென்னையில் உள்ள இ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான செட் அமைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை(ஜூலை 5) புதன்கிழமை பூஜையுடன் துவங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது .