இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு நடிகர் ரவி தேஜா தற்போது , ஈகிள், டைகர் நாகேஸ்வர ராவ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து நடிக்க கதைகளை கேட்டு வருகிறார். அந்த வகையில் கலர் போட்டோ பட இயக்குனர் சந்தீப் ராஜ் இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மல்டி ஸ்டார் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ விஷ்வாக் சென் இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் அல்லாமல் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் .