நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
சாமியார் நித்தியானந்தா மீது பாலியல், கடத்தல், கற்பழிப்பு என பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் தலைமறைவானார். நித்யானந்தாவின் தலைமை சீடர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை ரஞ்சிதா.
இதற்கிடையே கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக நித்தியானந்தாவே கூறியிருந்தார். அதனை ஹிந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவரே கூறியிருந்தார்.
தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், அந்நாட்டின் அதிபராக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா அறிவித்தார். ஆனால் அந்த நாடு எங்கு இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவும் ஆற்றி, அதனை தனது பிரத்யேக யுடியூப் சேனலில் பதிவேற்றி வந்தார்.
இந்த நிலையில் கைலாசா நாட்டின் ‛லிங்க்டு இன்' இணையதள பக்கத்தில் ரஞ்சிதாவின் பெயர் ‛நித்யானந்த மாயி சுவாமி' என்றும், அவர் கைலாசா நாட்டின் பிரதமர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. எங்கிருக்கிறது என்றே தெரியாத ஒரு நாட்டிற்கு தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் எல்லாம் ஓவராக இருக்கும் நிலையில், அந்த நாட்டிற்கு அதிபர், பிரதமர் எல்லாம் அறிவிக்கப்பட்டு விட்டனர்.