சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகின் மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணனுமான நரேஷ் என்பவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி முறையாக தன்னிடம் இருந்து விவாகரத்து பெறாமல் நரேஷ் நான்காவது திருமணம் செய்து கொண்டார் என வழக்கு தொடர்ந்து பரபரப்பை கூட்டினார். அந்த சமயத்தில் நரேஷ், பவித்ரா, லோகேஷ் இருவரும் இணைந்து நடித்த மல்லி பெல்லி திரைப்படம் வெளியானது. இந்த படம் அவர்களது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருந்தது.
படம் ரிலீஸ் ஆனபோது பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் கூட இந்த திருமண சர்ச்சை காரணமாக இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானபோது ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தில் தன்னை மிகவும் மோசமாக சித்தரித்து உள்ளதாக கூறி இந்த படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நரேஷின் மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி தற்போது ஓடிடி தளத்தில் இருந்து மல்லி பெல்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.