பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி. 'டோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி சினிமா தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். தமிழில் முழுநீள திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
'எல்.ஜி.எம்.' என்ற இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், இவானா நாயகியாகவும் நடித்துள்ளனர். நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியே இசை அமைத்தும் உள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு தோனி பேசியதாவது : சென்னை எனக்கு பிடித்த இடம். எனது கிரிக்கெட் அறிமுகம் இங்குதான் நடந்தது. இங்குதான் அதிக ஸ்கோர் செய்தேன். அளவில்லா அன்பை கொடுத்த ரசிகர்கள் சென்னை ரசிகர்கள், எனது வாழ்க்கையின் பல நல்ல விஷயங்கள் சென்னையில் தான் நடந்தது. அதனால்தான் சாக்ஷி சினிமா தயாரிக்க வேண்டும் என்று சொன்னபோது தமிழ் படம் தயாரிக்க சொன்னேன்.
படத்தின் விஷயங்களில் நான் தலையிட மாட்டேன். ஆனால் கதை கேட்பேன், பணிகள் முடிந்ததும் படம் பார்ப்பேன். எனது கருத்தை சொல்வேன் என்றேன். இந்த படத்தை பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. நான் என் தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவன். நதியாவின் நடிப்பில் அதை மீண்டும் உணர்ந்தேன். ஹரிஷ், இவானா, யோகிபாபு பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். இது தாய், மகன், மாமியார் உறவை பேசுகிற படம். எல்லோருக்கும் பொருந்துகிற கதை அம்சம் கொண்ட படம். சென்னை ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு இந்த படத்தின் மூலம் சிறிய பகுதியை திருப்பி கொடுப்பதாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.