துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
1995ம் ஆண்டு 'சந்திரலேகா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் வனிதா விஜயகுமார், அதன்பிறகு ராஜ்கிரணுடன் நடித்த மாணிக்கம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி குணசித்தர வேடங்கள், வில்லி வேடங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது 'கடைசி தோட்டா' என்ற படத்தில் ஹீரோயினாக அதுவும் டெரர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆர்.வி.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை நவீன் இயக்குகிறார். அவருடன் ராதாரவி, ஸ்ரீகுமார் வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வி.ஆர்.சுவாமிநாதன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மர்டர் மிஸ்ட்ரி ஜார்னரில் படம் தயாராகி வருகிறது. மலைப்பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வனிதா நடிக்கிறார்.