பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் 'த்ரிபின்னா' என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்பத்தை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: நானும் கணேஷ் ராஜகோபாலனும் 38 வருட நண்பர்கள். அப்போது இருந்தே அவரது வயலின் இசையை நான் ரெக்கார்ட் செய்து வருகிறேன். நான் முதன்முதலில் கேட்ட வயலின் ஹார்மோனி, இளையராஜாவின் 'ஹவ் டு நேம் இட்'. இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம். ஆனால், கையில் வாசிக்கும் அனுபவமே சிறந்தது. அதில் தான் மனித உணர்ச்சிகளை கடத்த முடியும். நாம் அனுபவித்த வயலின் அனுபவம் அனைவருக்கும் விரிவடைய வேண்டும். இந்த வயலின் சிம்பொனி பலருக்கும் உத்வேகம் தரும்” என்றார்.