ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரான்ஸில் வாகன சோதனையின் போது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதை தொடர்ந்து அங்கு கலவரம் நடந்தது. இதுவரை 350 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கலவரக்காரர்கள் வாகனங்களுக்கு தீவைத்தல், கடைகளை சூறையாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா பாரிஸ் சென்றுள்ளார். அவர் இந்த கலவரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஊர்வசி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரிசில் நடந்து வரும் கலவரமும், வன்முறை சம்பவங்களும் கவலை அளிக்கிறது. பயமாகவும் இருந்தது. என்னுடன் வந்த குழுவினரின் பாதுகாப்பு நிலையை நினைத்து வருந்துகிறேன். இந்தியாவில் இருக்கும் எங்கள் குடும்பத்தினரும் எங்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டனர். நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்கிறோம். பாரிஸ் அழகான நாடு. இங்கு இப்படி வன்முறை சம்பவங்கள் நடப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும் தற்போது கலவரம் கட்டுக்குள் வந்துள்ளது'' என்று எழுதியிருக்கிறார்.