இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகாத்திகேயன் நடித்து வரும் படம் 'அயலான்'. ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வேற்று கிரக வாசி கதை என்பதால் இப்படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன. அதற்கான வேலைகள் கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது.
படத்தில் சில முக்கிய காட்சிகளின் விஎப்எக்ஸ் வேலைகளுக்காக சென்னையில் மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அதில் நடிகர்கள் யாரும் பங்கு பெறவில்லையாம். சென்னையில் சில பிரபலமான இடங்களைத் தனியாகப் படமாக்கியுள்ளார்கள். அவற்றை வைத்து விஎப்எக்ஸ் காட்சிகள் சிலவற்றை உருவாக்க வேண்டியுள்ளதாம். 'அயலான்' படத்திற்காக உருவாகி வரும் விஎப்எக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' கடந்த வாரம் வெளியானது. அவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். காஷ்மீரில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'மாவீரன்' பட வெளியீட்டிற்காகக் கடந்த வாரம் படப்பிடிப்பிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் மீண்டும் அப்படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.