2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன். இவர் தற்போது ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், அதில் விட்டதை இந்த ஜெயிலரில் பிடித்து விட வேண்டும் என்று ஒரு அதிரடியான கதையுடன் களம் இறங்கி இருக்கிறார் நெல்சன். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் சிலை கடத்தலை மையமாக கொண்ட கதையை திரைக்கதை அமைத்திருக்கிறார் நெல்சன். சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய புள்ளி ரஜினி ஜெயிலராக இருக்கும் சிறையில் அடைக்கப்படுகிறார். அதையடுத்து அவனை மீட்பதற்காக ஒரு கும்பல் களமிறங்குகிறது. அப்போது ரஜினிக்கும், அவர்களுக்கும் இடையே நடப்பது தான் இந்த ஜெயிலர் படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது.