இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் சில வருடங்களுக்கு முன்பே கால்பதித்து பான் இந்தியா நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்று விட்டார் நடிகர் துல்கர் சல்மான். கடந்த வருடங்களில் கடைசியாக தமிழ், தெலுங்கு மொழிகளில் அவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி படங்களாக அமைந்தன. ஆனாலும் தற்பொழுது மலையாளத்தில் அவர் நடித்து வரும் கிங் ஆப் கோதா என்கிற ஒரு படம் மட்டுமே அவரது கைவசம் இருக்கிறது. அதில் மட்டுமே தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் மற்றும் பஞ்சாபி பாடகியான ஜேஸ்லின் ராயல் என்பவருடன் ஹீரியா என்கிற ஆல்பம் பாடலில் இணைந்து நடித்துள்ளார் துல்கர் சல்மான். அரிஜித் சிங் என்பவர் இசையமைத்துள்ள இந்த ஆல்பம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், “கடந்த சில மாதங்களாக மறைத்து வைத்த ஒரு விஷயம் இது.. வரும் ஜூலை முதல் உங்கள் கவனத்திற்கு வருகிறது” என்று கூறியுள்ளார்.