இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
12 ஆண்டுகளுக்கு முன் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, நடிப்பில் வெளியான 'தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா. ராஜ் அர்ஜூன் என்ற துணை நடிகரின் மகள்தான் சாரா. இந்த படத்தில் மனவளர்ச்சி குன்றிய விக்ரமின் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் சாராவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் படிக்க போய்விட்டார். 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏ.எல்.விஜய் சாராவை 'சைவம்' படத்தில் நடிக்க வைத்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் பதின்மவயது நந்தினியாக (ஐஸ்வர்யாராய்) நடித்தார். அவரின் தோற்றமும், அழகும், அவர் அணிந்து நடித்த உடைகளும் வெகுவாக பாராட்டுகளை குவித்தது. இந்த நிலையில் தானே சாராவை ஹீரோயினாக அறிமுகப்படுத்த இருப்பதாக ஏ.எல்.விஜய் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது “குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைப்பது மிகவும் எளிது. அவர்களின் மூளை மிகக் கூர்மையாக வேலை செய்யும். சாராவும் அப்படித்தான், நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு அவ்வளவு இயல்பாக நடிப்பார். அது நடிப்பாக இல்லாமல், ஒரு குடும்பத்தில் சிறுமி ஒருத்தி வாழ்வதுபோல் இருக்கும். பொன்னியின் செல்வனில் மணி சார் சாராவை தெய்வீக அழகுடன் சித்திரித்துவிட்டார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அவரை நான் 2025ம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன்”என்றார்.