திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக வலம் வருகிறார் நடிகை தமன்னா. சமீபத்தில் இவர் கையில் வைரம் வடிவலான மோதிரம் போன்று அணிந்த போட்டோ ஒன்று வைரலானது. அது வைரம் என்றும், உலகின் 5வது பெரிய வைரம் என்றும், இதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் செய்தி பரவியது. மேலும் சிரஞ்சீவி உடன் 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தில் தமன்னா நடித்தபோது அவரின் நடிப்பை பாராட்டி, ராம் சரண் மனைவி உபாசானா அவருக்கு இதை பரிசளித்ததாகவும் தகவல் வெளியானது.
இதை மறுத்துள்ள தமன்னா, ‛‛இது நீங்கள் நினைப்பது போன்று வைரம் அல்ல, வெறும் பாட்டில் ஓபனர் தான்'' என தெளிவுப்படுத்தி உள்ளார்.
முன்னதாக இதே போட்டோ சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வைரலான போது அப்போதும் இதேப்போன்று ஒரு விளக்கத்தை தமன்னா அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.