படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‛ஜெயிலர்'. அவருடன் சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சுனில், மிர்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன் லால் நடித்துள்ளார். வருகிற ஆக., 10ம் தேதி படம் வெளியாக உள்ளது. சென்னையில் நேற்று(ஜூலை 28) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஜினி பேசியது தன்னை விமர்சிப்பவர்களுக்கும், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்களுக்கு பதிலடியாகவும் அமைந்தது.
குடிப்பழக்கம் தான் எனக்கு சூனியம்
விழாவில் அவர் பேசியதாவது : ‛‛குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. நாம் நமது வேலையை பார்த்துகிட்டு போய்க் கொண்டே இருக்கணும். குடிப்பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது இருப்பதை விட இன்னும் உயரத்தில் எங்கோ இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்டே சூனியம். குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே தயவு செய்து குடிப்பழக்கத்தை விடுங்கள்.
காட்டில் பெரிய மிருகங்களை எப்போதும் சின்ன மிருகங்கள் சீண்டிக்கிட்டே இருக்கும். உதாரணத்திற்கு கழுகை, காக்கா சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனால் கழுகு அமைதியாக இறக்கையை கூட ஆட்டாமல் உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும். காக்காவால் அது முடியாது. உலகில் உன்னதமான மொழி மவுனம் மட்டுமே.
யாருக்கும் பயப்பட மாட்டேன்
சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்னை இப்போது அல்ல, 1977லேயே ஆரம்பித்தது. சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் ரஜினி பயந்துட்டாருனு சொன்னாங்க. கடவுளுக்கும், நல்லவர்களுக்கும் மட்டுமே பயப்படுவேன். மற்ற யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்.
இவ்வாறு ரஜினி பேசினார்.