பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக மாறி வெற்றிமாறன் இயக்கத்தில் ‛விடுதலை' என்கிற படத்தில் நடித்தார். நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் இறுதியில் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டாம் பாகத்திற்கு மீதம் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை அருகில் உள்ள நடிகர் சூரியின் சொந்த ஊரான ராஜாக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு நடிகர் சூரியும், விஜய் சேதுபதியும் சென்று அம்மன் தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளனர். தற்போது கோயில் திருவிழா நடைபெறுகிறது என்பதால் கோயிலுக்கு வருகை தந்த அவர்கள், சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.