தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக சிலர் விஜய்யை விமர்சனம் செய்திருந்தார்கள்.
நடிகர் சூரியும் விஜய்யை விமர்சனம் செய்தது போன்று ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சூரி. அதில், 'தம்பி தவறான தகவலை பரப்புவது இந்த சமூகத்துக்கு எப்போதுமே தீமையே தரும். அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நிதானத்தையும் முதிர்ச்சியும் காட்ட வேண்டும். நல்ல மாற்றங்களை பெறுவதற்கு இந்த சமூகம் தகுதியானது. அதனால் அன்பையும் நன்மையையும் பரப்புவதில் உங்களது சிறந்ததை வெளிப்படுத்துங்கள். அதனால் நம்முடைய பணிகளில் எப்போதும் முழு கவனத்தை செலுத்துவோம்' என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பதிவு போட்டு உள்ளார் நடிகர் சூரி.