தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் மன்மத லீலை மற்றும் தமிழ், தெலுங்கில் உருவான கஸ்டடி என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ஆனால் இந்த மூன்று படங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட படம் தான் பார்ட்டி. வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நட்சத்திர பட்டாளம் இடம் பெற்றுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்துள்ளார். தனது படங்களை சிரமப்பட்டாவது ரிலீஸ் செய்து விடும் தயாரிப்பாளர் டி.சிவா பார்ட்டி படத்தின் ரிலீஸ் இவ்வளவு தாமதமாவது ஏன் என்பது குறித்த தகவலை தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
இது பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பிஜி தீவில் தான் படமாக்கப்பட்டன. அதற்கு காரணம் படத்தின் கதை ஒரு பக்கம் என்றாலும் இன்னொரு பக்கம் பிஜி தீவில் படப்பிடிப்பை நடத்தினால் அங்கே செலுத்தும் கட்டணத்தில் 47 சதவீதம் நமக்கு திருப்பி தரப்படும் என ஒரு சலுகை அப்போது இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக சூழ்நிலை மாறி சுற்றுலா பாதிக்கப்பட்டு இது போன்று சலுகைத்தொகை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. இது போன்ற பல படங்கள் இந்த சலுகைக்காக நிலுவையில் இருக்கின்றன.
தற்போது அங்கு அரசாங்கம் மாறியுள்ள நிலையில் இது போன்ற சலுகை தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. படத்தை ரிலீஸ் செய்து விட்டால் இந்த தொகையை பெற முடியாமல் போய்விடும். அந்த அளவிற்கு இது மிகப்பெரிய தொகையும் கூட. அதனால் அந்த தொகையை பெற்ற பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் மாதத்திற்குள் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறியுள்ளார்.