பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு |
'அமரன்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் மதராஸி படப்பிடிப்பு முடிந்து விட்டதை அடுத்து பராசக்தியில் நடித்து வருகிறார். மேலும், சிவகார்த்திகேயனிடத்தில் வெங்கட் பிரபுவும் ஒரு கதை சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது எனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார் வெட்கட் பிரபு. அதனால் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்ததும் வெங்கட்பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைவார் என்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு வெங்கட்பிரபு இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.