தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ரீ-ரிலீஸ் என்பது தற்போது தமிழ் சினிமாவில் டிரெண்ட் ஆக மாறிவிட்டது. 'வேட்டையாடு விளையாடு' படத்திற்குப் பிறகு 15 வருடங்களுக்கு முன்பு வெளியான 'சுப்பிரமணியபுரம்' படம் நாளை ரீ-ரிலீசாகிறது. கிளாசிக் படங்களை மீண்டும் வெளியிடும் இந்த வழக்கம் தற்போது தெலுங்கு சினிமா பக்கமும் போய்விட்டது.
தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'வாரணம் ஆயிரம்' படம் தெலுங்கில் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் டப்பிங் ஆகி அங்கு வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தை நாளை ஆகஸ்ட் 4ல், அங்கு ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆன ஒரு படத்தை அதிகமான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். அவற்றிற்கான முன்பதிவும் குறிப்பிடும் அளவில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையமைப்பில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்து வெளிவந்த '7 ஜி ரெயின்போ காலனி' படத்தின் தெலுங்கு டப்பிங்கான '7 ஜி பிருந்தாவன் காலனி' படத்தையும் ரி-ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். 4 கே மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் படத்தை வெளியிடும் பணி தற்போது நடந்து வருகிறது. விரைவில் வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும் என்று தகவல்.