மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி |
பாலிவுட்டில் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் என இரண்டு தளங்களில் வெற்றிகரமாக பயணித்து வருபவர் கரண் ஜோஹர். பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், கடந்த சில வருடங்களாகவே படத் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனில் இறங்கிய கரண் ஜோஹர் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் ரன்வீர் சிங் கதாநாயகனாகவும், ஆலியா பட் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக 90களில் பார்த்த படங்களின் உணர்வை இது கொடுத்திருப்பதாக படம் பார்த்த பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி இந்த படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என் டி சர்ட்டின் காலர் நனைந்து ஒரு பக்கெட்டில் நிரப்பும் அளவிற்கு கண்ணீர் விட்டேன்'' என்று கூறியுள்ளார். மேலும், ரன்வீர் சிங் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு பற்றி குறிப்பிட்டுள்ள பார்வதி, “எனக்கும் இப்போது ஒரு ராக்கிவாலா தேவைப்படுகிறார்” என்று பாராட்டியுள்ளார்.
பார்வதியின் பாராட்டுக்கு ரன்வீர் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.