ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். 90 சதவிகிதம் பேர் அந்த ஆசையை மனதுக்குள் பூட்டி வைத்து விடுவார்கள், சிலர் தானாக வாய்ப்பு வரும் என்று காத்திருப்பார்கள், சிலர் வாய்ப்பு தேடுவார்கள், சிலர் ஜெயிப்பார்கள், பலர் தோற்பார்கள்.
குறிப்பாக டாக்டர்களிடையே ஆக்டராகும் ஆசை அதிகமாகவே இருக்கிறது. ஏற்கெனவே பல டாக்டர்கள் சினிமாவில் நடித்து வரும் நேரத்தில் ஈரோட்டை சேர்ந்த இளம் டாக்டர் ஆதித் சுந்தரேஸ்வரரும் நடிகராகி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ‛‛எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். எங்கள் தலைமுறையின் முதல் டாக்டர் நான் தான். மெரிட்டில் தேர்வாகி சென்னை மருத்துவ கல்லூரியில் படித்தேன். அப்போது உடன் படித்த மாணவர்கள் நீ சினிமாவில் நடிக்கலாம் என்று ஆசையை தூண்டினார்கள். இதனால் கல்லூரி நாடகங்களில் நடித்தேன். நடனம், நடிப்பு கற்றேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். வசனமே இல்லா அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்தேன்.
‛தூரிகையே ஓவியமானதே' என்ற குறும்படத்தில் நடித்தேன். அதன் மூலம் பல குறும்பட வாய்ப்புகள் கிடைத்தது. மிஷ்கின் உதவியாளர் மீனா குமாரி இயக்கிய 'பாசு பேபி' என்ற வெப் தொடரில் நடித்தேன். 'நேற்று நீ இன்று நான்' படத்தில் ஹீரோவாக நடித்தேன். தற்போது சேரன் இயக்கும் வெப் தொடரில் நடித்து வருகிறேன். அதோடு 'ஆயிரம்கால் மண்டபம்' என்ற படத்திலும் நடித்து வருகிறேன்'' என்றார்.