தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் |

நடிகர் துல்கர் சல்மான் தற்போது தனது கிங் ஆப் கோதா என்கிற படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஓணம் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. அதே சமயம் முதன்முறையாக பிரபல பாலிவுட் மற்றும் பஞ்சாபி பாடகியான ஜேஸ்லின் ராயல் என்பவருடன் ஹீரியா என்கிற ஆல்பம் பாடலில் இணைந்து நடித்துள்ளார் துல்கர் சல்மான். கடந்த ஜூலை 25ஆம் தேதி இந்த ஆல்பம் வெளியாகி விட்டாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆல்பத்தை புரமோட் செய்து வருகிறார் துல்கர் சல்மான்.
அப்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்த ஆல்பத்தை உங்களுக்கு உதவியாக புரமோஷன் செய்ய வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள்..? நித்யா மேனனையா அல்லது மிருணாள் தாக்கூரையா என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் மிருணாள் தாக்கூர் என்று பதில் அளித்தார் துல்கர் சல்மான். இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும்.
காரணம் கடந்த பத்து வருடங்களாக துல்கர் சல்மானுடன் இணைந்து மூன்று படங்களில் கதாநாயகி நடித்துள்ளார் நித்யா மேனன். ஆனால் மிருணாள் தாக்கூர் கடந்த வருடம் வெளியாக சீதாராமம் என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் துல்கருடன் இணைந்து நடித்துள்ளார். அதனால் நித்யா மேனன் பெயரைத்தான் அவர் சொல்வார் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இதற்கு விளக்கம் அளித்த துல்கர் சல்மான், “சீதாராமம் திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அந்த படம் நான் கனவு கண்டதை விட மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. அது ஒரு ஐகானிக் படம்” என்று கூறி சென்டிமென்ட் ஆக மிருணாள் தாக்கூர் பெயரை தான் கூறியதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் துல்கர் சல்மான்.