படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தெலுங்கு படமான ஜதிரத்னலு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பரியா அப்பதுல்லா. அந்த படம் வெற்றி பெற்றபோதும் பரியா அப்துல்லாவுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையில்லை. தற்போது 'தி ஜெங்காபுரு கர்ஸ்' என்கிற இந்தி வெப் தொடரில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் .சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கும் 'வள்ளி மயில்' படத்தின் மூலம் தமிழக்கு வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் பரியா அப்துல்லா தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது " எனது அக்கா சென்னையில் இருப்பதால் அடிக்கடி சென்னை வந்து நானும் தமிழ் கற்றுக் கொண்டேன். வள்ளி மயில் படப்பிடிப்பு தளத்திலும் தமிழ் கற்றேன். இப்போது தமிழ் பேசுவதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும், ஓரளவுக்கு பேசவும் முடியும்.
அடிப்படையில் நான் ஒரு நாடக நடிகை, ஆங்கில நாடகத்தில் நடித்திருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் இந்த படத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். இங்கு தெருக்கூத்து கலை பற்றி முறையாக பயிற்சி பெற்று நடிக்கிறேன். வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் பரியா அப்துல்லா.