சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக்: தமிழில் மட்டும் தோல்வி அடைந்த பாண்டவர்கள் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 3 கதைகள் | கைதி 2 படத்தில் இடம்பெறும் விக்ரம் படத்தின் 3 எல்சியு கேரக்டர்கள் | அஜித்துக்கு ஜோடியாகும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி | கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் சித்திக். 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்', விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா', பிரசன்னா நடித்த 'சாது மிரண்டால்', விஜய் நடித்த 'காவலன்', கடைசியாக அரவிந்த்சாமி நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கினார்.
69 வயதான சித்திக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆபத்தான நிலையில் அவசர பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. உயிர்காக்கும் கருவிகள் உதவியால் அவர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.