பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் சித்திக். 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்', விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா', பிரசன்னா நடித்த 'சாது மிரண்டால்', விஜய் நடித்த 'காவலன்', கடைசியாக அரவிந்த்சாமி நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கினார்.
69 வயதான சித்திக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆபத்தான நிலையில் அவசர பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. உயிர்காக்கும் கருவிகள் உதவியால் அவர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.