பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் 'வணங்கான்'. நந்தா, பிதாமகன் படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்தனர். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.
அதன் பிறகு நடிகர் அருண் விஜய் ஹீரோவாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ரோசினி பிரகாஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் உள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.